search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    தலைமையின் கட்டளையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கட்சியினருக்கு அதிமுக எச்சரிக்கை

    தலைமையின் கட்டளையை மீறி செயல்படும் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக தலைமை எச்சரிக்கை விடுத்துள்ளது.
    சென்னை:

    தலைமையின் கட்டளையை மீறி செயல்படும் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக தலைமை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    அதிமுகவின் அரசியல் பயணம், கட்சியின் நிர்வாகத்தை விமர்சிப்பது, தேவையற்ற கருத்து பரிமாற்றங்களில் ஈடுபடக்கூடாது. யாராவது அத்தகைய செயல்களில் ஈடுபட்டால் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவர் என ஓபிஎஸ், ஈபிஎஸ் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    ஓபிஎஸ் - ஈபிஎஸ்

    அதிமுகவில் தனிமனிதர் துதி பாடலுக்கு இடமில்லை. அதிமுக தலைவர்களின் பெயரில் பேரவை ஆரம்பிப்பது, தலைவர்களின் படங்களை சிதைப்பது கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக அதிமுக கட்சியில் இருந்து முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×