என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருக்கோவிலூர் பகுதியில் முக கவசம் அணியாமல் வந்த 30 பேருக்கு அபராதம் - 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
Byமாலை மலர்22 May 2021 2:18 PM GMT (Updated: 22 May 2021 2:18 PM GMT)
திருக்கோவிலூர் பகுதியில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் சாலையில் தேவையின்றி சுற்றித்திரிந்த 3 பேரின் மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருக்கோவிலூர்:
ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும் திருக்கோவிலூர் பகுதியில் சிலர் தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றி வருவதாலும், முககவசம் அணியாமல், சமூக இடைவெளியை கடைபிடிக்காததாலும் கொரோனா பரவும் அபாயம் உள்ளது. இதை தடுக்க போலீசார், வருவாய்த்துறை மற்றும் நகராட்சி ஊழியர்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் திருக்கோவிலூர் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் சிவசந்திரன் தலைமையில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் சாலையில் தேவையின்றி சுற்றித்திரிந்த 3 பேரின் மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் முககவசம் அணியாமல் வந்த 30 பேருக்கு அபராதம் விதித்தனர். உரிய ஆவணங்கள் இல்லாமல் மோட்டார் சைக்கிளில் வந்த 102 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X