search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    மனைவி இறந்த துக்கத்தில் முதியவர் தற்கொலை

    கோவை பேரூர் அருகே மனைவி இறந்த துக்கத்தில் வாழ்க்கையில் விரக்தியடைந்த முதியவர் தற்கொலை செய்துகொண்டார்.

    கோவை:

    கோவை பேரூர் அருகே உள்ள தமிழ் நகரை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 78). கடந்த 13-ந் தேதி உடல் நலக்குறைவு காரணமாக இவரது மனைவி இறந்து விட்டார். மனைவி இறந்தால் பழனிசாமி மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து சாணிப்பவுடரை கரைத்து குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார். 

    இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக பழனிசாமியை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று மாலை பழனிசாமி பரிதாபமாக இறந்தார். இது குறித்து பேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×