search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமணம்
    X
    திருமணம்

    இ-பதிவு நடைமுறையில் திருமணத்துக்கான அனுமதி நீக்கம்

    மருத்துவ காரணம், இறப்புகளுக்காக மட்டும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பதிவு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அமல்படுத்தப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    மேலும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    * மக்கள் வெளியூர் செல்ல இன்றும் நாளையும் தனியார், அரசு பேருந்துகள் இயக்கப்படும்.

    இ பதிவு

    * தமிழக அரசின் இ-பதிவு நடைமுறையில் திருமணத்துக்கான அனுமதி நீக்கப்பட்டுள்ளது.

    * மருத்துவ காரணம், இறப்புகளுக்காக மட்டும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பதிவு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    * மருத்துவ காரணங்களுக்கு மாவட்டத்திற்குள் பயணிக்க இ-பதிவு தேவையில்லை.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


    Next Story
    ×