என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பனியன் நிறுவன தொழிலாளி தற்கொலை
Byமாலை மலர்22 May 2021 6:46 AM GMT (Updated: 22 May 2021 6:48 AM GMT)
ஊரடங்கால் வேலை இழந்ததால் திருப்பூர் பனியன் நிறுவன தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
திருப்பூர்:
சேலம் மாவட்டம் வருசலூரை சேர்ந்தவர் ராஜா (வயது 37). பனி யன் நிறுவனத்தில் பேக்கிங் தொழில் செய்து வந்தார்.இவர் திருப்பூர் முத்தணம்பாளையத்தில் மனைவி இந்திராணி,மகன் தினேஷ்குமார் (16), மகள் கனிஷ்கா (14) ஆகியோருடன் குடும்பத்துடன் வசித்து வந்தார். ராஜாவுக்கு அதிக கடன் இருந்தது. ஊரடங்கு காரணமாக வேலையில்லாததால் சம்பளம் கிடைக்காத நிலை ஏற்பட்டது. இதனால் கடன் பணத்தை எப்படி கொடுக்க போகிறோம் என்று சில நாட்களாக கவலையில் இருந்து வந்தார்.
மேலும் தனது மனைவியின் கண் சிகிச்சைக்கு பணம் இல்லா மல் தவித்து வந்தார். இதனால் மனமுடைந்த ராஜா, சம்பவத்தன்று வீட்டின் மேற்கூரையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த நல்லூர் போலீசார் உடலை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X