search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    விருகம்பாக்கத்தில் ஆசை வார்த்தை கூறி பள்ளி மாணவி பலாத்காரம்- பெயிண்டர் கைது

    விருகம்பாக்கத்தில் ஆசை வார்த்தை கூறி 12-ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த பெயிண்டரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

    போரூர்:

    விருகம்பாக்கம் இந்திரா நகரைச் சேர்ந்த தம்பதிகளின் 17 வயது மகள் அசோக் நகரில் உள்ள அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இவருக்கு நேற்று முன்தினம் திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது பெற்றோர் எழும்பூரில் உள்ள மகப்பேறு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று மகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர்.

    அப்போது மகள் ஏற்கனவே கருத்தரித்து இருந்ததும் கடந்த வாரம் அந்த கருகலைந்து வயிற்று வலி ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டதும் தெரிய வந்தது. இதனால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுபற்றி மகளிடம் பெற்றோர் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    கடந்த பிப்ரவரி மாதம் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பெற்றோர்கள் வெளியூர் சென்றிருந்த போது எதிர் வீட்டில் வசித்து வரும் பெயிண்டர் அரவிந்தன்(24) திடீரென வீட்டிற்குள் புகுந்து ஆசை வார்த்தை கூறி என்னிடம் நெருக்கமாக நடந்து கொண்டார். என்னை பாலியல் பலாத்காரம் செய்தார்.

    இதுபற்றி நீ வெளியே கூறக்கூடாது என்றும் என்னை மிரட்டினார். இதனால் வெளியே சொல்லவில்லை.

    இவ்வாறு மாணவி கூறினார்.

    இதையடுத்து தங்களது வீட்டிற்குள் அத்துமீறி புகுந்து மகளுடன் உடலுறவில் ஈடுபட்ட அரவிந்தன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வடபழனி அனைத்து மகளிர் போலீசில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர்.

    விசாரணை நடத்திய இன்ஸ்பெக்டர் ரேணுகா தேவி, பெயிண்டர் அரவிந்தனை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தார். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    Next Story
    ×