search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பள்ளிக் கல்வித்துறை
    X
    பள்ளிக் கல்வித்துறை

    12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் அலகுத்தேர்வு- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

    மாணவர்களைப் பொதுத் தேர்வுக்குத் தயார்படுத்தும் வகையில் வாட்ஸ்அப் மூலம் அலகுத் தேர்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதேசமயம், பிளஸ் 2 பொதுத்தேர்வை திட்டமிட்டபடி நடத்தி முடிக்க, பள்ளிக் கல்வித்துறை தீவிரம் காட்டி வருகிறது.

    இந்நிலையில் 12-ஆம் வகுப்பு மாணவர்களைப் பொதுத்தேர்வுக்குத் தயார்படுத்தும் வகையில் வாட்ஸ்அப் மூலம் அலகுத் தேர்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.

    இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வாட்ஸ் அப்பில் மாணவிகளுக்குத் தனியாகவும், மாணவர்களுக்குத் தனியாகவும் குழு ஏற்படுத்த வேண்டும்.

    கொரோனா வைரஸ்


    மாணவ மாணவிகளுக்குத் தனித்தனியாக உள்ள வாட்ஸ் அப்  குழுவில் வினாத்தாள்களை அனுப்ப வேண்டும்.

    மாணவர்கள் வினாத்தாளைப் பார்த்து அதற்குரிய விடைகளைத் தனித் தாளில் எழுத வேண்டும்.

    விடைத்தாளில் பெற்றோர் கையொப்பம் பெற்றுப் பின் அதைப் படம் பிடித்து, PDF ஆக மாற்றிப் பதிவேற்ற வேண்டும்.

    விடைத்தாளில் பெயர், தேர்வுத்துறையால் வழங்கப்பட்டுள்ள பதிவு எண் ஆகியவை கட்டாயம் இடம் பெற வேண்டும்.

    வாட்ஸ் அப்  குழுவில் வினாத்தாள், விடைத்தாள் தவிர வேறு செய்திகள், வீடியோக்களைப் பதிவிடக் கூடாது.

    ஆசிரியர்கள் விடைத்தாள்களை வாட்ஸ்அப் மூலம் திருத்தி அதற்கான மதிப்பெண்களை வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    கொரோனா பாதிப்பு குறையாத நிலையில், பொதுத்தேர்வை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டால், அலகுத்தேர்வு மதிப்பெண்களை கொண்டு தேர்வு முடிவுகளை வெளியிட கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
    Next Story
    ×