search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைகோ
    X
    வைகோ

    கொரோனா தடுப்பு நிதி- ரூ.2 லட்சம் வழங்கினார் வைகோ

    கொரோனா தடுப்புப் பணிகளுக்காக, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமது நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பிற்கான ஒரு மாத ஊதியத்துடன் மேலும் பணம் சேர்த்து, ரூ.2 லட்சம் நிதியாக வழங்கினார்.
    சென்னை:

    ம.தி.மு.க. தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் வேண்டுகோளை ஏற்று, தமிழக அரசு மேற்கொண்டு வரும் கொரோனா தடுப்புப் பணிகளுக்காக, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமது நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பிற்கான ஒரு மாத ஊதியத்துடன் மேலும் பணம் சேர்த்து, ரூ.2 லட்சம் நிதியாக, வழங்கினார்.

    இதேபோன்று, ம.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களும், தங்கள் ஒரு மாத ஊதியத்தை வழங்குவர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×