என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவள்ளூர் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது
Byமாலை மலர்18 May 2021 4:36 PM GMT (Updated: 18 May 2021 4:36 PM GMT)
திருவள்ளூர் அருகே கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த மூன்று பேர் போலீசாரை கண்டதும் தாங்கள் வைத்திருந்த பையுடன் ஓட்டம் பிடித்தனர்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அந்த 3 பேரையும் விரட்டி சென்றனர். அவர்களில் 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். ஒருவரை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் போலீசார் அந்த நபர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 1,300 கிராம் கஞ்சா பொட்டலங்கள் விற்பனை செய்வதற்காக கொண்டு வந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து கஞ்சா கடத்தியதாக சென்னை திருமுல்லைவாயல் கணபதி தெருவை சேர்ந்த அழகர்சாமி (வயது 23) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X