search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    திருவெறும்பூர் அருகே மது விற்ற வாலிபர் கைது

    திருவெறும்பூர் அருகே மது விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவெறும்பூர்:

    கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. இதனை சிலர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு ஏற்கனவே டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டிருந்த நாட்களில் மதுபாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்து தற்போது கூடுதல் விலைக்கு விற்று வருகின்றனர். அந்தவகையில் திருவெறும்பூரை அடுத்த அண்ணா வளைவு பகுதியில் டாஸ்மாக் மதுபாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்ற அண்ணா வளைவு சொசைட்டி தெருவை சேர்ந்த பால் சாமி மகன் ஜெயராமன் (வயது 26) என்பவரை துவாக்குடி போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 126 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    Next Story
    ×