search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    மானூர் அருகே சூதாடிய 4 பேர் கைது

    மானூர் அருகே சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மானூர்:

    மானூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் மற்றும் போலீசார் ரஸ்தா பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள திருமண மண்டபத்தில் 4 பேர் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து விசாரித்தபோது ரஸ்தாவை சேர்ந்த பரதேசி (வயது 44), மாடசாமி (36), அஜித்குமார் (26), சேனாதிபதி (32) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்து ரொக்கப்பணம் 390 ரூபாயை பறிமுதல் செய்தனர். இதேபோல் நாஞ்சான்குளத்தில் மது விற்றதாக முத்துக்குமார் (39) என்பவரை கைது செய்து 4 மதுபாட்டில்களையும், 150 ரூபாயையும் பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×