search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    ஜோலார்பேட்டை பகுதியில் சாராயம் விற்ற 2 பேர் கைது

    ஜோலார்பேட்டை பகுதியில் சாராயம் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை பகுதியில் சாராயம் விற்பதாக ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெயலட்சுமி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் ஜோலார்பேட்டை அருகே புது ஓட்டல் தெருவில் சோதனை செய்தனர். அப்போது வக்கணம்பட்டி வி.டி.கோவிந்தசாமி தெருவை சேர்ந்த விக்டர் என்ற மாதையன் (வயது30) 2 லாரி டியூப்பில் 110 லிட்டர் சாராயமும், 5 லிட்டர் கேனில் 4 லிட்டர் சாராயம் வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை போலீசார் கைதுசெய்து 114 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    மேலும் அதேப்பகுதியில் பாழடைந்த கட்டிடத்தில் சாராயம் விற்றுக் கொண்டிருந்த வக்கணம்பட்டி காமராஜர் தெருவை சேர்ந்த விஜயகுமார் (42) என்பவரையும் கைது செய்து, அவரிடமிருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×