என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜோலார்பேட்டை பகுதியில் ஒரே நாளில் 146 பேருக்கு கொரோனா
Byமாலை மலர்18 May 2021 10:20 AM GMT (Updated: 18 May 2021 10:20 AM GMT)
ஜோலார்பேட்டை பகுதியில் ஒரே நாளில் 146 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்ட கொரோனா கட்டுப்பாட்டு அதிகாரி டாக்டர் பி.சுமதி, ஜோலார்பேட்டை வட்டார மருத்துவர் அலுவலர் (பொறுப்பு) மீனாட்சி, ஜோலார்பேட்டை அரசு டாக்டர் முரளி, சுகாதார ஆய்வாளர் கோபி ஆகியோர் ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர், சின்னமோட்டூர், புதுப்பேட்டை பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், நடமாடும் கொரோனா பரிசோதனை வாகனத்தில் சென்று நேற்று முன்தினம் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தனர்.
அதில் ஜோலார்பேட்டை வட்டார அளவில் உள்ள மூர்த்தியூர், கே.பி.வட்டம், பால்காரன் வட்டம், இடையம்பட்டி, குடியானகுப்பம், வக்கணம்பட்டி, கவுண்டப்பனூர், சந்தைக்கோடியூர், பார்சாம்பேட்டை, பழைய ஜோலார்பேட்டை, சின்னமோட்டூர், ஏலகிரி கிராமத்தைச் சேர்ந்த 146 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து நேற்று மண்டலவாடி பகுதியில் சுகாதாரப் பணியாளர்கள் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் உடல் வெப்ப பரிசோதனை செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X