search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வழக்கு பதிவு
    X
    வழக்கு பதிவு

    கோவையில் ஊரடங்கை மீறி வெளியில் சுற்றிய 4,340 பேர் மீது வழக்கு

    கோவை மாவட்டத்தில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று ஒரே நாளில் மொத்தம் 4,340 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது. அவர்களிடம் இருந்து 165 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    கோவை:

    தமிழகத்தில் 2-வது அலையாக கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.

    இதனை கட்டுப்படுத்துவதற்காக வருகிற 24-ந் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. காய்கறி, இறைச்சி, மளிகை, மீன் கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இந்த கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

    மேலும் அவசியமின்றி வாகனங்களில் சுற்றுபவர்களின் எண்ணிக்கை குறையவில்லை. இதனை தடுப்பதற்காக முக்கிய சாலைகளில் போலீசார் தடுப்புகளை அமைத்து வாகனங்களில் தேவையில்லாமல் சுற்றி திரிபவர்களுக்கு அபராதம் விதிப்பதுடன், வாகனங்களையும் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    கோவை மாவட்டத்தில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று ஒரே நாளில் மொத்தம் 4,340 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது. அவர்களிடம் இருந்து 165 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இது குறித்து போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவர் கூறியதாவது:-

    காலை 10 மணிக்கு பின்னரும் சாலைகளில் வாகன போக்குவரத்து காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்று பொதுமக்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வந்தது.

    ஆனால் அவர்கள் எதையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து தங்களது வாகனங்களில் வலம் வருகின்றனர்.

    இதனையடுத்து நோய் தொற்று குறித்த அச்சமின்றி வாகனங்களில் வலம் வரும் நபர்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. நேற்று புறநகர் பகுதியில் மட்டும் 2 ஆயிரம் பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அவர்களிடம் இருந்து 150 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கோவை மாநகரில் 2,340 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு, 15 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×