search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    மது விற்ற அ.தி.மு.க நிர்வாகி கைது

    திருப்பூர் அருகே மது விற்ற அ.தி.மு.க. நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
    அவினாசி:

    ஊரடங்கையொட்டி டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் சட்டவிரோத மது விற்பனையை தடுக்கும் வகையில் போலீசார்அதிரடிசோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்தநிலையில் திருப்பூர் மாவட்டம் அவினாசியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் சோதனை நடத்தினர்.  

    அப்போது அவினாசி ஒன்றியம் வேட்டுவபாளையத்தை சேர்ந்த அவினாசி மேற்கு ஒன்றிய அ.தி.மு.க அண்ணா தொழிற்சங்க செயலாளர் செந்தில்குமார் (வயது 33)  சாலையபாளையம் குட்டையில் மதுபானம் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.  அவரிடமிருந்து 13 மதுபான பாட்டில்கள் மற்றும் ரூ.1000 பறிமுதல் செய்யப்பட்டது.
    Next Story
    ×