search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    X
    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    கி.ரா.மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

    கரிசல் இலக்கியமும், இந்த மண்ணும், தமிழும் உள்ளவரை கி.ரா.வின் புகழ் வாழும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
    சென்னை: 

    புதுச்சேரி லாசுப்பேட்டையில் உள்ள அரசுக் குடியிருப்பில் வசித்து வந்த பிரபல எழுத்தாளரும், சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான கி.ராஜநாராயணன் வயது முதிர்வின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு நேற்று நள்ளிரவு காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

    இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் கூறியுள்ளதாவது:-

    கரிசல் குயில் கி.ரா.அவர்களின் மறைவால் தமிழ்த்தாய் தன் அடையாளங்களுள் ஒன்றை இழந்து தேம்புகிறாள். கரிசல் இலக்கியமும், இந்த மண்ணும், தமிழும் உள்ளவரை அவரது புகழ் வாழும். 



    கி.ரா.அவர்களின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும். 

    கி.ரா.அவர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினர் மற்றும் வாசகர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். 

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
    Next Story
    ×