search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடிநீர் தட்டுப்பாடு
    X
    குடிநீர் தட்டுப்பாடு

    தேவதானப்பட்டி அருகே குடிநீர் தட்டுப்பாடு, அடிக்கடி ஏற்படும் மின்தடையால் கிராம மக்கள் அவதி

    காமக்காபட்டி, அம்சாபுரத்தில் குடிநீர் தட்டுப்பாடும் நிலவுகிறது. இங்கு 10 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
    தேவதானப்பட்டி:

    தேவதானப்பட்டி அருகே காமக்காபட்டி மற்றும் அம்சாபுரம் ஆகிய 2 கிராமங்கள் உள்ளன. கொடைக்கானல் மலை அடிவாரத்தில் உள்ள இந்த கிராமங்களில் கடந்த 3 மாதங்களாக அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. பகல் நேரத்தில் சுமார் 3 மணி நேரம் மட்டுமே மின்சாரம் இருப்பதாகவும், இரவில் 8 மணி அளவில் மின்தடை ஏற்பட்டால் மறுநாள் காலை 10 மணி அளவில் தான் மின்சாரம் வருவதாகவும் கிராம மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். இரவில் மின்தடை ஏற்படுவதால் விஷ பூச்சிகள் வீட்டுக்குள் வருவது தெரிவதில்லை. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் மின்தடையால் விவசாய நிலங்களில் மின் மோட்டார்கள் இயக்க முடியாத காரணத்தினால், பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனர்.

    இதேபோல் காமக்காபட்டி, அம்சாபுரத்தில் குடிநீர் தட்டுப்பாடும் நிலவுகிறது. இங்கு 10 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் குடிநீர் கிடைக்காமல் கிராம மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
    எனவே அடிக்கடி ஏற்படும் மின்தடை மற்றும் குடிநீர் தட்டுப்பாட்டை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் சார்பில் மனு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.
    Next Story
    ×