search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வழக்கு பதிவு
    X
    வழக்கு பதிவு

    ஊரடங்கை மீறியதாக 21 பேர் மீது வழக்கு

    ஊரடங்கை மீறியதாக 21 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நொய்யல்:

    கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் அருள்செல்வன், செந்தில்குமார், மற்றும் சண்முகானந்தவடிவேல் மற்றும் போலீசார் ஆகியோர் கொண்ட குழுவினர் தவிட்டுப்பாளையம், பாலத்துறை, புகழூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ஊரடங்கு உத்தரவை மீறி தங்களது இரு சக்கர வாகனங்களில் சிலர் சுற்றித்திரிந்தனர். இதையடுத்து ஊரடங்கை மீறியதாக கரூர் பள்ளமருத பட்டியை சேர்ந்த அசோக்குமார் (வயது 32), சுந்தராம்பாள் நகரைச் சேர்ந்த செந்தில்குமார் (32), பரமத்தி வேலூர் அருகே உள்ள வில்லிபாளையத்தைச் சேர்ந்த ராஜகோபால் (37), கொளக்கட்டுபுதூரை சேர்ந்த சண்முகம் (48), சேலம் மாவட்டம் ஓமலூர்அருகே அழகாபுரத்தைச்சேர்ந்த பாபு (30), கரூர் செட்டிபாளையத்தை சேர்ந்த அரவிந்த் குமார் (26) உள்பட 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×