search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    காரிமங்கலம் பகுதியில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்

    காரிமங்கலம் பேரூராட்சி பகுதியில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக அனைத்து வார்டுகளிலும் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
    காரிமங்கலம்:

    காரிமங்கலம் பேரூராட்சி பகுதியில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக அனைத்து வார்டுகளிலும் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி 15-வது வார்டு காட்டுசீகலஅள்ளி, சின்னான்டியூர், பட்டாதாரன் கொட்டாய், நல்லாகவுண்டர் கொட்டாய் ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இந்த பணிகளை காரிமங்கலம் தாசில்தார் சின்னா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பேரூராட்சி தலைமை எழுத்தர் பெருமாள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்.
    Next Story
    ×