என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இன்று முதல் மின்சார ரெயில் சேவை 205 ஆக குறைப்பு
Byமாலை மலர்17 May 2021 2:02 AM GMT (Updated: 17 May 2021 2:02 AM GMT)
சென்னை கடற்கரை-வேளச்சேரி மார்க்கத்தில் 24 ரெயில் சேவையும், கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர் மார்க்கத்தில் 66 ரெயில் சேவையும் என குறைக்கப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை தீவிரமடைந்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, பொது போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆனால் கூட்டம் குறைவாக இருக்கும் பயணிகள் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.மேலும், சென்னையில் மின்சார ரெயில் சேவைகளும் குறைக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்று குறையத் தொடங்கியபோது 600-க்கும் மேற்பட்ட மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்பட்டன. அதன் பிறகு மீண்டும் தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியதால், 450 மின்சார ரெயில் சேவையாக குறைக்கப்பட்டது.
பின்னர் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டபின்னர், 288 மின்சார ரெயில் சேவையாகவும், தற்போது, இன்று (17-ந் தேதி) முதல் ஊரடங்கில் மேலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், சாதாரண நாட்களில் (திங்கள் முதல் சனிக்கிழமை வரை) மின்சார ரெயில் சேவை 205 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் இன்று முதல் மூர்மார்க்கெட், ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி மார்க்கத்தில் 85 மின்சார ரெயில் சேவையும், மூர்மார்க்கெட், கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை மார்க்கத்தில் 30 சேவையும், சென்னை கடற்கரை-வேளச்சேரி மார்க்கத்தில் 24 ரெயில் சேவையும், கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர் மார்க்கத்தில் 66 ரெயில் சேவையும் என 205 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
சென்னை ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை தீவிரமடைந்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, பொது போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆனால் கூட்டம் குறைவாக இருக்கும் பயணிகள் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.மேலும், சென்னையில் மின்சார ரெயில் சேவைகளும் குறைக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்று குறையத் தொடங்கியபோது 600-க்கும் மேற்பட்ட மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்பட்டன. அதன் பிறகு மீண்டும் தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியதால், 450 மின்சார ரெயில் சேவையாக குறைக்கப்பட்டது.
சென்னை ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X