என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட பழுது சரிசெய்யப்பட்டது
Byமாலை மலர்16 May 2021 6:32 PM GMT (Updated: 16 May 2021 6:32 PM GMT)
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட பழுது சீரமைக்கப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு வருபவர்களுக்கு தேவையான ஆக்சிஜன் வழங்குவதில் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
இதையடுத்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம், ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்து இலவசமாக வழங்க அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. சுப்ரீம் கோர்ட்டும் இதற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது.
இந்த பழுதை சரிசெய்யும் பணியில் ஸ்டெர்லைட் நிறுவன தொழில்நுட்ப வல்லுனர்கள் ஈடுபட்டனர். அதே நேரத்தில் பழுதை சரிசெய்வதற்காக இஸ்ரோ மையத்தில் இருந்து தொழில்நுட்ப வல்லுனர்களும் ஸ்டெர்லைட் ஆலைக்கு வந்தனர். அவர்கள் இணைந்து பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், பழுது கண்டுபிடிக்கப்பட்டு இன்று சரி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து மீண்டும் ஆலையில் முறையாக ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுகிறதா? என்று ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை படிப்படியாக இயக்கி சோதனை செய்து வருகின்றனர். இதில் பழுது முழுமையாக சரிசெய்யப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டால், தொடர்ந்து ஆக்சிஜன் உற்பத்தி நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு வருபவர்களுக்கு தேவையான ஆக்சிஜன் வழங்குவதில் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
இதையடுத்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம், ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்து இலவசமாக வழங்க அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. சுப்ரீம் கோர்ட்டும் இதற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது.
இதன் தொடர்ச்சியாக கடந்த வாரம் ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்துக்கு மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது. ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் உள்ள அனைத்து மோட்டார்களும் இயக்கி பரிசோதிக்கப்பட்டன. உற்பத்தி நிலையம் முழுமையாக பராமரிக்கப்பட்டது. அதன்பிறகு மருத்துவ தேவைக்கான ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டது. அதன்படி 5 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்து நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து உற்பத்தி நிலையத்தில் உள்ள குளிர்விக்கும் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென பழுது ஏற்பட்டது. இதனால் ஆக்சிஜன் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
இந்த பழுதை சரிசெய்யும் பணியில் ஸ்டெர்லைட் நிறுவன தொழில்நுட்ப வல்லுனர்கள் ஈடுபட்டனர். அதே நேரத்தில் பழுதை சரிசெய்வதற்காக இஸ்ரோ மையத்தில் இருந்து தொழில்நுட்ப வல்லுனர்களும் ஸ்டெர்லைட் ஆலைக்கு வந்தனர். அவர்கள் இணைந்து பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், பழுது கண்டுபிடிக்கப்பட்டு இன்று சரி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து மீண்டும் ஆலையில் முறையாக ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுகிறதா? என்று ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை படிப்படியாக இயக்கி சோதனை செய்து வருகின்றனர். இதில் பழுது முழுமையாக சரிசெய்யப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டால், தொடர்ந்து ஆக்சிஜன் உற்பத்தி நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X