search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    தமிழகத்தில் இன்று 33,181 பேருக்கு புதிதாக கொரோனா

    சென்னையில் இன்று மேலும் 6247 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.

    அதன்படி, தமிழகத்தில் இன்று 33,181 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 15 லட்சத்து 98 ஆயிரத்து 216  ஆக அதிகரித்துள்ளது.

    தமிழகத்தில் தற்போது 2,19,342 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    கொரோனா பரிசோதனை


    வைரஸ் பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 21,317 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13 லட்சத்து 61 ஆயிரத்து 204 ஆக உயர்ந்துள்ளது.

    ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 311 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 17 ஆயிரத்து 670 ஆக அதிகரித்துள்ளது.

    சென்னையில் இன்று மேலும் 6247 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×