search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    கொரோனா புதிய உச்சத்தால் பொதுமக்கள் அச்சம்

    திருப்பூரில் புதிய உச்சமாக கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
    திருப்பூர்:

    திருப்பூர்  மாவட்டத்தில்  கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று  புதிய உச்சமாக ஒரே நாளில் 1008 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில்  கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை  35 ஆயிரத்து 671ஆக உயர்ந்துள்ளது.  மாவட்டம் முழுவதும்  5,639 பேர்   சிகிச்சை பெற்று வருகின்றனர்.  பலி எண்ணிக்கை 273ஆக உள்ளது.
      
    மாவட்டத்தில் தினமும் 700 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில்  தொற்று பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது சுகாதாரத்துறை அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து தடுப்பு நடவடிக்கைகளில்  அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
      
    தினமும் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அத்தியாவசிய தேவைக்காக மட்டும் பொதுமக்கள் வீட்டை விட்டு  வெளியே வர வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். கொரோனா புதிய  உச்சத்தை எட்டியுள்ளதால் திருப்பூர் மாவட்ட  பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். 
    Next Story
    ×