என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அ.தி.மு.க. பிரமுகருக்கு கொலை மிரட்டல்- 4 பேர் மீது வழக்கு
Byமாலை மலர்15 May 2021 12:59 PM GMT (Updated: 15 May 2021 12:59 PM GMT)
அ.தி.மு.க. பிரமுகருக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே சம்சிகாபுரத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 44). அ.தி.மு.க. மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளரான இவர், சங்கரன்கோவிலைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் மனைவி தனலட்சுமியிடம் இரு ஏலச்சீட்டுகளுக்காக ரூ.9 லட்சம் செலுத்தியதாகவும், பின்னர் அந்த பணத்தை தனலட்சுமி திருப்பி கொடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதையடுத்து சுப்புலாபுரத்தில் உள்ள தனலட்சுமியின் தந்தையான விசைத்தறிக்கூட உரிமையாளர் ஜெகநாதனிடம் சென்று ரவிச்சந்திரன் பணத்தை கேட்டார். அப்போது ஜெகநாதன், அவருடைய மகள் தனலட்சுமி, மருமகன் கல்யாணசுந்தரம், விசைத்தறிக்கூடத்தில் பணியாற்றிய பாலசுப்பிரமணியன் ஆகிய 4 பேரும் சேர்ந்து ரவிச்சந்திரனை அவதூறாக பேசி கொலைமிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், ஜெகநாதன் உள்பட 4 பேர் மீது கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X