என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவள்ளூர் அருகே பூச்சி மருந்து குடித்து வாலிபர் தற்கொலை
Byமாலை மலர்15 May 2021 10:52 AM GMT (Updated: 15 May 2021 10:52 AM GMT)
திருவள்ளூர் அருகே பூச்சி மருந்து குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த மேல் விளாகம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 32). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு பவித்ரா (30) என்ற மனைவியும், குணஸ்ரீ (10) என்ற மகனும், பவநிதி (8) என்ற மகளும் உள்ளனர்.
குடிப்பழக்கம் கொண்ட மணிகண்டன், கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் இருந்தபோது, மணிகண்டனுக்கு தீராத வயிற்றுவலி ஏற்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த அவர், தன் வீட்டின் அருகே உள்ள வயல்வெளிக்குச் சென்று அங்கு பூச்சி மருந்து குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கீழே விழுந்து கிடந்தார். இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு, சிகிச்சைக்காக திருவள்ளூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி மணிகண்டன் பரிதாபமாக இறந்து போனார். இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X