search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    மதுரை அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது

    மதுரை அருகே கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மதுரை:

    மதுரை மாநகர போலீசார் கொரோனா ஊரடங்கையொட்டி நகர் முழுவதும் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தீக்கதிர் பை பாஸ் ரோடு பகுதியில் கஞ்சா விற்பதாக தகவல் வந்தது. அதன் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் வாடிப்பட்டி, பெருமாள்பட்டியை சேர்ந்த ராமர் (வயது 24) என்பதும், அவர் கஞ்சா விற்றதும் தெரியவந்தது. பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து, அவரிடமிருந்து கஞ்சா, பணத்தை பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×