என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருச்சி அருகே நள்ளிரவில் கழுத்தை அறுத்து வாலிபர் கொலை
மணப்பாறை:
திருச்சி மாவட்ட எல்லையான துவரங்குறிச்சி அருகே உள்ள கீரணிப்பட்டி கிராமமம். இங்குள்ள குளக்கரை பகுதியில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் வாலிபர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
இன்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்கள் வளநாடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிறகு உடல் கிடந்த இடத்தை ஆய்வு செய்தனர். கொலை செய்யப்பட்டவரின் புகைப்படத்தை, மின்னஞ்சலில், வெளி மாவட்டம் மற்றும் உள்ளூர் காவல் நிலையங்களுக்கும் அனுப்பி வைத்து விசாரணை மேற் கொண்டனர்.
இதில் கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த வாலிபர் சிவகங்கை மாவட்டம் உலகம்படடி அருகே உள்ள வலசைப்பட்டியை சேர்ந்த பிச்சைமணி (வயது 34) என்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது பிச்சைமணி மீது ஏற்கனவே கொலை வழக்கு ஒன்று நிலுவையில் இருப்பது தெரியவந்தது.
எனவே முன் விரோதத்தில் யாராவது மர்ம நபர்கள் அவரை கடத்தி வந்து இங்கு வைத்து கொலை செய்தார்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் துவரங்குறிச்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்