என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு பயணம்
Byமாலை மலர்15 May 2021 4:54 AM GMT (Updated: 15 May 2021 4:54 AM GMT)
திருப்பூரில் பனியன் நிறுவனங்கள் மூடப்பட்டதால் வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்கின்றனர்.
திருப்பூர்:
கொரோனா இரண்டாவது அலை பரவல் தீவிரமாக உள்ளதால் 2 வார ஊரடங்கு அறிவிப்பை தமிழக அரசு அறிவித்தது.
இதில் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக பின்னலாடை நிறுவனங்கள் தாமாக முன்வந்து இன்று முதல் நிறுவனங்களை அடைத்து ஊரடங்கில் பங்கேற்றுள்ளனர்.பனியன் நிறுவனங்கள் மூடப்பட்டதால் பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்கின்றனர்.
எர்ணாகுளத்தில் இருந்து திருப்பூர் வழியாக பீகார் மாநிலம் பாரவுனி செல்லும் சிறப்பு விரைவு ரெயிலில் கொரோனா சமூக இடைவெளியை மறந்து முண்டியடித்தபடி வடமாநில தொழிலாளர்கள் ரெயிலில் ஏறி பயணித்தனர். ரெயில் புறப்பட்ட நிலையிலும் பலர் தொடர்ந்து ஏறியபடி இருந்ததால் இளைஞர்கள் சிலர் ரெயிலின் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணித்தனர்.
சொந்த ஊருக்கு செல்லும் வடமாநில தொழிலாளர்களுக்கு வசதியாக போதிய ரெயில்களை இயக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X