search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    பெரம்பலூரில் கொரோனாவுக்கு மூதாட்டி பலி

    பெரம்பலூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி உயிரிழந்தார். மேலும் மாவட்டத்தில் 183 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று பெரம்பலூர் வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 103 பேரும், வேப்பந்தட்டை வட்டாரத்தில் 38 பேரும், வேப்பூர் வட்டாரத்தில் 20 பேரும், ஆலத்தூர் வட்டாரத்தில் 22 பேரும் என மொத்தம் 183 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 4,083 ஆக உயர்ந்துள்ளது. இதில் 32 பேர் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர்.

    இந்த நிலையில் கொரோனாவுக்கு பெரம்பலூர் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 67 வயதுடைய மூதாட்டி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.

    மருத்துவமனைகளில் இருந்து கொரோனாவுக்கு 2,916 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 1,135 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் 930 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

    மேலும் மாவட்டத்தில் நேற்று 363 பேருக்கு கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியும், 46 பேருக்கு கோவேக்சின் கொரோனா தடுப்பூசியும் என மொத்தம் 409 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி 36,269 பேருக்கும், கோவேக்சின் கொரோனா தடுப்பூசி 2,054 பேருக்கும் என மொத்தம் 38,323 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி 6,980-ம், கோவேக்சின் கொரோனா தடுப்பூசி 500-ம் கையிருப்பில் உள்ளது.
    Next Story
    ×