search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விஷம்
    X
    விஷம்

    பாபநாசத்தில் டாஸ்மாக் கடை முன்பு வி‌ஷம் குடித்து விவசாயி தற்கொலை

    பாபநாசம் அருகே தொடர் வயிற்று வலி காரணமாக டாஸ்மாக் கடை முன்பு விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    பாபநாசம்:

    பாபநாசம் அருகே நாகமங்கலம் கிராமத்தில் தோப்பு தெருவில் வசித்து வந்தவர் இளங்கோவன். வயது (35). விவசாயி. இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    இளங்கோவனுக்கு தொடர்ந்து வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். சிகிச்சை பெற்றும் பலன் அளிக்காததால் இளங்கோவன் பாபநாசம் அரசு டாஸ்மாக் கடை முன்பு மதுவில் பூச்சி மருந்தை கலந்து குடித்து மயங்கினார். அவரை மீட்டு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றும் சிகிச்சை பலனளிக்காமல் இறந்து விட்டார்.

    இது குறித்து அவரது மனைவி ராஜேஸ்வரி (29) கொடுத்த புகாரின் பேரில் பாபநாசம் இன்ஸ்பெக்டர் உமா மகேஸ்வரி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×