search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    வல்லத்தில் கொரோனா நோயாளி தப்பி ஓட்டம்

    வல்லத்தில் கொரோனா நோயாளி தப்பி ஓடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வல்லம்:

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்துள்ள கீழ பாளையத்தை சேர்ந்தவர் பிரபு (வயது 36 ). இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தஞ்சையை அடுத்த வல்லத்தில் உள்ள குடிசை மாற்று வாரிய கொரோனா சிகிச்சை மையத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில் அங்கு சிகிச்சையில் இருந்த அவர் திடீரென அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து துணை தாசில்தார் மரிய ஜோசப் கொடுத்த புகாரின் பேரில் வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கொரோனா நோயாளி பிரபுவை தேடி வருகின்றனர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×