என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கொடைரோடு அருகே ரூ.1.60 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல்- பெண் கைது
கொடைரோடு:
தமிழகத்தில் கடந்த 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் டாஸ்மாக் கடைகள் முழுமையாக அடைக்கப்படும் என அரசு அறிவித்தது. இதனைதொடர்ந்து மதுவிற்பனை நடைபெறவில்லை. மேலும் கள்ளசந்தையில் மதுவிற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்திருந்தனர்.
மாவட்டம் முழுவதும் சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் மதுவிற்பனை அதிகரித்தது. சிலர் தங்கள் தேவைக்கும் சிலர் பதுக்கி விற்பதற்கும் மதுவாங்கி சென்றனர். பள்ளபட்டி பகுதியில் கள்ளச்சந்தையில் மதுவிற்கப்படுவதாக புகார் எழுந்தது.
இதனைதொடர்ந்து அம்மையநாயக்கனூர் இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் பாலமுத்தையா மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது பள்ளபட்டி சிப்காட் பகுதி தேவர் நகரில் மணிகண்டன் மனைவி ஆனந்தஜோதி(40) என்பவர் வீட்டில் மதுபதுக்கி கூடுதல் விலைக்கு விற்றது தெரியவந்தது.
இதனைதொடர்ந்து போலீசார் ஆனந்த ஜோதியை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள 1355 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்