என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
விழுப்புரம் பகுதியில் ஊரடங்கு விதியை மீறிய 13 கடைகளுக்கு அபராதம்
விழுப்புரம்:
விழுப்புரம் வட்டத்தில் உள்ள வளவனூர், காணை, கண்டமங்கலம், கெடார் உள்ளிட்ட பகுதிகளில் பொது முடக்க விதிகளை பின்பற்றி அத்தியாவசிய கடைகள் இயங்குகின்றனவா? என்று தாசில்தார் வெங்கடசுப்பிரமணியன் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அப்போது வளவனூர் பகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரமான நண்பகல் 12 மணியை கடந்து செயல்பட்டதாக 2 மளிகைக் கடைகள், 4 இனிப்பகங்கள் என மொத்தம் 6 கடைகளுக்கு தலா ரூ.500 அபராதம் விதித்து தாசில்தார் வெங்கடசுப்பிரமணியன் உத்தரவிட்டார்.
மேலும் கண்டமங்கலத்தில் நண்பகல் 12 மணிக்கு மேல் இயங்கிய மளிகைக் கடை, காணையில் 2 பலசரக்கு கடைகள் என மொத்தம் 7 கடைகளுக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 13 கடைகளுக்கு மொத்தமாக ரூ.6,500 அபராதம் விதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆய்வின்போது வருவாய் ஆய்வாளர்கள் சிவசக்தி, தங்கம், நர்மதா, இளவரசி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்