search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடைகளுக்கு சீல்
    X
    கடைகளுக்கு சீல்

    கடையநல்லூரில் 4 கடைகளுக்கு சீல் வைப்பு

    கொரோனா தொற்று நோய் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருவதால் பொதுமக்கள் தொற்றுநோய் தொடர்பான விவரங்களை 240440 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என நகராட்சி ஆணையாளர் தெரிவித்தார்.
    அச்சன்புதூர்:

    கடையநல்லூர் தாசில்தார் ஆதிநாராயணன், நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன், சுகாதார அலுவலர் நாராயணன் ஆகியோர் கடையநல்லூர் பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சட்டமன்ற அலுவலகம் அருகே மெயின் ரோட்டில் 2 டீக்கடை, பஜார் பகுதியில் உள்ள மரக்கடை, மேலக்கடையநல்லூரில் உள்ள டீக்கடை ஆகியவற்றில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் அரசின் உத்தரவை மீறி அதிக அளவில் கூட்டம் நிற்பதை கண்ட அதிகாரிகள் உடனடியாக அந்த 4 கடைகளையும் பூட்டி ‘சீல்’ வைத்தனர்.

    கடையநல்லூர் நகராட்சியில் கொரோனா தொற்று நோய் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருவதால் பொதுமக்கள் தொற்றுநோய் தொடர்பான விவரங்களை 240440 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என நகராட்சி ஆணையாளர் தெரிவித்தார்.
    Next Story
    ×