என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கடையநல்லூரில் 4 கடைகளுக்கு சீல் வைப்பு
Byமாலை மலர்12 May 2021 5:17 PM GMT (Updated: 12 May 2021 5:17 PM GMT)
கொரோனா தொற்று நோய் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருவதால் பொதுமக்கள் தொற்றுநோய் தொடர்பான விவரங்களை 240440 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என நகராட்சி ஆணையாளர் தெரிவித்தார்.
அச்சன்புதூர்:
கடையநல்லூர் தாசில்தார் ஆதிநாராயணன், நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன், சுகாதார அலுவலர் நாராயணன் ஆகியோர் கடையநல்லூர் பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சட்டமன்ற அலுவலகம் அருகே மெயின் ரோட்டில் 2 டீக்கடை, பஜார் பகுதியில் உள்ள மரக்கடை, மேலக்கடையநல்லூரில் உள்ள டீக்கடை ஆகியவற்றில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் அரசின் உத்தரவை மீறி அதிக அளவில் கூட்டம் நிற்பதை கண்ட அதிகாரிகள் உடனடியாக அந்த 4 கடைகளையும் பூட்டி ‘சீல்’ வைத்தனர்.
கடையநல்லூர் நகராட்சியில் கொரோனா தொற்று நோய் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருவதால் பொதுமக்கள் தொற்றுநோய் தொடர்பான விவரங்களை 240440 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என நகராட்சி ஆணையாளர் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X