search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    நீடாமங்கலம் வட்டாரத்தில் பெண்கள் உள்பட 21 பேருக்கு கொரோனா

    நீடாமங்கலம் பேரூராட்சி பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    நீடாமங்கலம்:

    நீடாமங்கலம் வட்டாரத்தில் தொடர்ந்து கொரோனா பரிசோதனைசெய்யப்பட்டது. இதில் நீடாமங்கலம் வட்டாரம் கோயில்வெண்ணி அரசு ஆரம்ப சுகாதார நிலைய பகுதியில் மட்டும் நேற்று பெண்கள் உள்பட 8 பேருக்கும், வடுவூர் பகுதியில் 7 பேருக்கும், பேரையூர் பகுதியில் ஒருவருக்கும், ராயபுரம் பகுதியில் ஒருவருக்கும், பொதக்குடி பகுதியில் 4 பேருக்கும் என மொத்தம் 21 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதிசெய்யப்பட்டது. இதில் நீடாமங்கலம் பேரூராட்சி பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், இதுகுறித்து தகவல் அறிந்த நீடாமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராணி முத்துலெட்சுமி தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் சிவக்குமார், சரவணன், கலையரசன், சண்முகராஜன், பார்த்திபன் மற்றும் சுகாதார செவிலியர்கள், தூய்மைபணியாளர்கள் தூய்மை பணிகளில் ஈடுபட்டனர்.

    கோவில்வெண்ணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று நடந்த கொரோனா தடுப்பூசி முகாமில் 2-வது தவணையாக 30 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
    Next Story
    ×