search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருட்டு
    X
    திருட்டு

    மேச்சேரி அருகே காய்கறி வியாபாரி வீட்டில் திருட்டு

    மேச்சேரி அருகே காய்கறி வியாபாரி வீட்டில் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மேச்சேரி:

    மேச்சேரி அருகே ஆரியகவுண்டனூர் பண்டாரத்தான் தெரு பகுதியை சேர்ந்தவர் தைலப்பன் (வயது 35). காய்கறி வியாபாரி. இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டை திறந்து வைத்து தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் வைத்திருந்த நகையை திருடினர். திடீரென சத்தம் கேட்டதால் தைலப்பன் எழுந்து பார்த்தார். திருடர்களை கண்டதும் சத்தம் போடவே மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். பின்னர் பீரோவை பார்த்தபோது அதில் இருந்த 1¾ பவுன் நகை, வெள்ளி கால் கொலுசு, வெள்ளி அரைஞாண் கொடி ஆகியவை திருட்டுபோனது தெரியவந்தது. இதுகுறித்து மேச்சேரி போலீசில் தைலப்பன் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×