என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கரூர் இரட்டை வாய்க்காலில் குப்பைகள் கொட்டப்படும் அவலம்- சமூக ஆர்வலர்கள் வேதனை
Byமாலை மலர்12 May 2021 11:17 AM GMT (Updated: 12 May 2021 11:17 AM GMT)
நீர் ஆதாரமாக விளங்கி வந்த கரூர் இரட்டை வாய்க்காலில் தற்போது குப்பைகள் கொட்டப்படும் அவலநிலை நீடித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் கூறினர்.
கரூர்:
கரூர் நகரில் இரட்டை வாய்க்கால் உள்ளது. ஒரு காலத்தில் இந்த வாய்க்காலில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த தண்ணீர் பொதுமக்களுக்கு மட்டுமின்றி விவசாய பணிகளுக்கும் நீர் ஆதாரமாக விளங்கி வந்தது.
அதன்பிறகு விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு குடியிருப்புகள் உருவாகின. நாளடைவில் இந்த இரட்டை வாய்க்காலும் கவனிப்பாரின்றி போனதால் தண்ணீரின்றி வறண்டது. தற்போது இந்த வாய்க்காலில், இங்குள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் தேங்கி நிற்கிறது. மேலும், அந்த வாய்க்காலில் குப்பை, கூளங்களும் அதிகளவு கொட்டப்படுகின்றன. செடி, கொடிகளும் வளர்ந்துள்ளன. விஷ பூச்சிகளின் நடமாட்டமும் உள்ளது.
தற்போது அவ்வப்போது கோடை மழை பெய்து வருகிறது. மேலும் தென்மேற்கு பருவமழை துவங்க உள்ளது. ஆகவே, இந்த இரட்டை வாய்க்காலை தூர்வாரி சுத்தப்படுத்தினால் பழைய நிலையை அடையலாம். பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் நீர் ஆதாரமாக அமையும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர் நகரில் இரட்டை வாய்க்கால் உள்ளது. ஒரு காலத்தில் இந்த வாய்க்காலில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த தண்ணீர் பொதுமக்களுக்கு மட்டுமின்றி விவசாய பணிகளுக்கும் நீர் ஆதாரமாக விளங்கி வந்தது.
அதன்பிறகு விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு குடியிருப்புகள் உருவாகின. நாளடைவில் இந்த இரட்டை வாய்க்காலும் கவனிப்பாரின்றி போனதால் தண்ணீரின்றி வறண்டது. தற்போது இந்த வாய்க்காலில், இங்குள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் தேங்கி நிற்கிறது. மேலும், அந்த வாய்க்காலில் குப்பை, கூளங்களும் அதிகளவு கொட்டப்படுகின்றன. செடி, கொடிகளும் வளர்ந்துள்ளன. விஷ பூச்சிகளின் நடமாட்டமும் உள்ளது.
தற்போது அவ்வப்போது கோடை மழை பெய்து வருகிறது. மேலும் தென்மேற்கு பருவமழை துவங்க உள்ளது. ஆகவே, இந்த இரட்டை வாய்க்காலை தூர்வாரி சுத்தப்படுத்தினால் பழைய நிலையை அடையலாம். பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் நீர் ஆதாரமாக அமையும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X