என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரக்கோணத்தில் தலைமை ஆசிரியர் வீட்டில் 14 பவுன் நகை திருட்டு
Byமாலை மலர்11 May 2021 3:08 PM GMT (Updated: 11 May 2021 3:08 PM GMT)
அரக்கோணத்தில் கொரோனா தொற்று சிகிச்சைக்கு சென்றிருந்த தலைமை ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகையை மர்மநபர்கள் திருடிச்சென்று விட்டனர்.
அரக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம், பாப்பான் குளம், உமா நகர் பகுதியில் வசித்து வருபவர் பெட்ரிக் ஞானதுரை. காஞ்சீபுரத்தில் அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஹேனா பெட்ரிக். இவர் அரக்கோணத்தில் நிதியுதவி பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
ஹேனா பெட்ரிக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் கடந்த 4-ந் தேதி வீட்டை பூட்டிக்கொண்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் பெட்ரிக் ஞானதுரையும் சென்னைக்கு சென்றிருந்தார். சிகிச்சை முடிந்து நேற்று வீட்டிற்கு திரும்பினர்.
வீட்டில் கதவைத் திறந்து பார்த்தபோது வீட்டின் பின் பக்க கதவு மற்றும் பீரோக்கள் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து பெட்ரிக் அரக்கோணம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது மர்நபர்கள் வீட்டின் பின்பக்க வழியாக வீட்டுக்குள் நுழைந்து, பீரோவை உடைத்து அதில் இருந்த 14 பவுன் தங்க நகையை திருடிச்சென்றது தெரியவந்தது. மேலும் வேறு ஒரு இடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 60 பவுன் நகைகள் மர்ம நபர்கள் கண்ணில் படாமல் தப்பியது.
இதுகுறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடிச்சென்ற மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X