search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல்வர் முக ஸ்டாலின்
    X
    முதல்வர் முக ஸ்டாலின்

    முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்குங்கள்- முக ஸ்டாலின் வேண்டுகோள்

    முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பொதுமக்கள் நன்கொடை வழங்குமாறு முக ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    சென்னை 

    கொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்படுவதால் நன்கொடை வழங்குமாறு தமிழக முதல் அமைச்சர் முக ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். 

    தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், சிகிச்சையில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் உள்ளனர்.

    இந்நிலையில் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தொழில் நிறுவனங்கள், பொதுமக்கள் நிதி வழங்குமாறு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். ரூ.10 லட்சத்திற்கு மேல் நிதியுதவி வழங்குபவர்களின் பெயர்கள் பத்திரிகையில் வெளியிடப்படும். ereceipt.tn.gov.in/cmprf/cmprf.html என்ற இணையதளம் வழியாக நிதியை செலுத்தலாம் என்றார். 
    Next Story
    ×