search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    சாயர்புரம் அருகே சூதாடிய 6 பேர் கைது

    சாயர்புரம் அருகே சூதாடிய 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சாயர்புரம்:

    சாயர்புரம் அருகே உள்ள புளியநகரில் உள்ள வாழைதோட்டத்தில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக சாயர்புரம் நகர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் அருள் சாம்ராஜ் மற்றும் போலீசார் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அதில் அதே பகுதியை சேர்ந்த பட்டுராஜ், சிவத்தையாபுரத்தை சேர்ந்த கிருஷ்ணராஜ், அன்புராஜ், பண்ணை விளை பீட்டர் ஸ்டாலின், நடுவைகுறிச்சியை சேர்ந்த செல்வராஜ், அலெக்ஸ் ஆகியோர் பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×