என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூர் மாவட்டத்தில் புதிய உச்சம்: ஒரே நாளில் 746 பேருக்கு கொரோனா தொற்று
Byமாலை மலர்11 May 2021 10:42 AM GMT (Updated: 11 May 2021 1:21 PM GMT)
திருப்பூர் மாவட்டத்தில் புதிய உச்சமாக ஒரே நாளில் 746 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சிகிச்சை பலனின்றி 2 பேர் பலியாகினர்.
திருப்பூர்:
திருப்பூரில் நாளுக்கு நாள் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே நாள் ஒன்றின் பாதிப்பு 500-ஐ கடந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை அடைந்தது. அதாவது மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 746 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த கொரோனா பாதிப்பின் போது கூட இந்த அளவிற்கு பாதிப்பு இல்லை. ஆனால் தற்போது கொரோனா 2-வது அலையில் 746 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது இதுவே முதல்முறையாகும்.
தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 31 ஆயிரத்து 931-ஆக உயர்ந்துள்ளது. இதுபோல் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 316 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 22-ஆக உள்ளது. மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 ஆயிரத்து 654 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுபோல் நேற்று சிகிச்சை பலனின்றி 2 பேர் பலியாகினர்.
அதாவது திருப்பூரை சேர்ந்த 51 வயது பெண் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கோவையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பலியானார். இதுபோல் 73 வயது ஆண் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் பலியானார். தற்போது மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 255-ஆக உயர்ந்துள்ளது. மேலும், மாவட்டத்தில் ஆக்சிஜன் படுக்கைகள் 92, கொரோனா படுக்கைகள் 119, ஐ.சி.யு. படுக்கைகள் 5 என மொத்தம் 216 படுக்கைகள் உள்ளது என சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X