என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கோவை அருகே திருமணம் ஆகாத விரக்தியில் விஷம் குடித்து டிரைவர் தற்கொலை
குனியமுத்தூர்:
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள ஒக்கரையை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 30). கடந்த 6 வருடங்களுக்கு முன்பு கோவைக்கு வந்த இவர் போத்தனூர் சாரதா மில் ரோட்டில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்து ஒரு தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
கார்த்திக்கின் தாய், தந்தை ஆகியோர் இறந்து விட்டனர். எனவே அவர் தனியாக வசித்து வந்தார். மேலும் 30 வயதான தனக்கு திருமணம் செய்து வைக்க யாருமே இல்லை என்பதால் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.
சம்பவத்தன்று கார்த்திக் திடீரென சத்தம் போட்டார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது கார்த்திக் கழிவறையில் சாணிப்பவுடரை கரைத்து குடித்த நிலையில் மயங்கி கிடந்தார். உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் கார்த்திக் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்