என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவோணம் அருகே முதியவரை தாக்கிய இளைஞர் கைது
Byமாலை மலர்11 May 2021 9:48 AM GMT (Updated: 11 May 2021 9:48 AM GMT)
திருவோணம் அருகே முதியவரை தாக்கிய இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவோணம்:
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுக்கா திருவோணம் அருகே உள்ள கொள்ளுக்காடு பகுதியை சேர்ந்தவர்கள் நீலகண்டன் (வயது51), மகேந்திரன்(32). கடந்த சில மாதங்களுக்கு முன் மகேந்திரன் ரூ.27 ஆயிரம் மதிப்புள்ள ஒரு மாடு வாங்கி நீலகண்டனுக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதில் மகேந்திரனிடம் ரூ.7 ஆயிரம் பாக்கியை நீலகண்டன் சில நாட்களில் தருகிறேன் என்று கூறியும் கொடுக்கவில்லையாம். இதில் ஏற்பட்ட தகராறில் இருவரும் தாக்கிக் கொண்டதில் நீலகண்டன் காயமடைந்து பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இது தொடர்பாக மகேந்திரன் மீது திருவோணம் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இந்நிலையில் மகேந்திரனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X