search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    திருவோணம் அருகே முதியவரை தாக்கிய இளைஞர் கைது

    திருவோணம் அருகே முதியவரை தாக்கிய இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவோணம்:

    தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுக்கா திருவோணம் அருகே உள்ள கொள்ளுக்காடு பகுதியை சேர்ந்தவர்கள் நீலகண்டன் (வயது51), மகேந்திரன்(32). கடந்த சில மாதங்களுக்கு முன் மகேந்திரன் ரூ.27 ஆயிரம் மதிப்புள்ள ஒரு மாடு வாங்கி நீலகண்டனுக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இதில் மகேந்திரனிடம் ரூ.7 ஆயிரம் பாக்கியை நீலகண்டன் சில நாட்களில் தருகிறேன் என்று கூறியும் கொடுக்கவில்லையாம். இதில் ஏற்பட்ட தகராறில் இருவரும் தாக்கிக் கொண்டதில் நீலகண்டன் காயமடைந்து பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

    இது தொடர்பாக மகேந்திரன் மீது திருவோணம் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இந்நிலையில் மகேந்திரனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×