என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேலூர் பகுதிகளில் 2000 மதுபாட்டில்கள் பறிமுதல்- 30 பேர் கைது
Byமாலை மலர்11 May 2021 9:38 AM GMT (Updated: 11 May 2021 9:38 AM GMT)
மேலூர் பகுதிகளில் 2000 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 30 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலூர்:
மதுரை மாவட்டம் மேலூர் உட்கோட்ட பகுதிகளான கொட்டாம்பட்டி, கீழவளவு, மேலவளவு உள் ளிட்ட பகுதிகளில் ஊரடங்கை பயன்படுத்தி சட்ட விரோதமாக மது விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து மேலூர் டி.எஸ்.பி. ரகுபதி ராஜா தலைமையில் காவல் ஆய்வாளர்கள் சார்லஸ் மற்றும் செல்வராஜ் தனிப்பிரிவு ஏட்டு முத்துக்குமார்,ராஜா மற்றும் போலீசார் அப்பகுதிகளில் சென்று சோதனையிட்டனர்.
அப்போது கொட்டாம் பட்டி பகுதியில் மதுவிற்ற 4 பேர் கைது செய்து அவர்களிடம் 207 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.
இதே போல் மேலவளவு கீழவளவு, மேலூர் உள்ளிட்ட பகுதிகளில் அனுமதியின்றி மதுவிற்பனை செய்த 26 பேரை கைது செய்து அவர் களிடம் 1800 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர். கடந்த 2 நாட்களில் மட்டும் 2000-க்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X