search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை
    X
    ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை

    உசிலம்பட்டியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கடன் பிரச்சனையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    மதுரை:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நகை பட்டறை  நடத்தி வந்தவர் சரவணன், மனைவி ஸ்ரீநிதி, மகள் மகாலட்சுமி(10), அபிராமி(5), என்ற இரு மகள்களும், அமுதன் 5 என்ற ஒரு மகனும் இருந்தனர்.

    பல வருடங்களாக நகை பட்டறை நடத்தி வந்துள்ளார் சரவணன், கடன் பிரச்சனை காரணமாக கடந்த சில நாட்களாக குடும்பத்தில் பல்வேறு  பிரச்சனைகள் இருந்து வந்துள்ளன.

    இந்நிலையில் இன்று காலையில் சரவணன், ஸ்ரீநிதி, இருவரும் தங்கள் 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு, தாங்களும் விஷம் அருந்தி  உயிரிழந்துள்ளனர்.

    இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×