search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    திருச்சி மத்திய மண்டலத்தில் ஒரே நாளில் 26 பேர் பலி

    திருச்சி மத்திய மண்டலத்தில் ஒரே நாளில் 3,003 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி 26 பேர் பலியாகி உள்ளனர்.

    திருச்சி:

    தமிழகத்தை ஆட்டிப்படைக்கும் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. தினசரி பாதிப்பு 29 ஆயிரத்தை எட்டியுள்ளதோடு, உயிர்ப்பலியும் அதிகரித்து வருவது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதற்கிடையே மத்திய மண்டலமான திருச்சி, கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களிலும் தினசரி பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

    அந்த வகையில் நேற்று திருச்சி மத்திய மண்டலத்தில் ஒரே நாளில் 3,003 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி 26 பேர் பலியாகி உள்ளனர். இது சுகாதாரத் துறையினரை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. முகக்கவசம், சமூக இடைவெளி, தடுப்பூசி ஆகியவற்றையும் தாண்டி நோயின் தாக்கம் அதிகரித்துள்ளதால் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.

    மத்திய மண்டலத்தை பொறுத்தவரை நேற்று அதிகபட்சமாக தஞ்சையில் 897 பேருக்கு தொற்று உறுதியானது. 428 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 2,941 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

    திருச்சியில் 813 பேருக்கு தொற்று உறுதியானது. 625 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 4,385 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள்.

    திருவாரூரில் 302 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. 271 பேர் குணமடைந்த நிலையில் 1,626 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    கரூரில் ஒரே நாளில் 291 பேருக்கு தொற்று உறுதியானது. 224 பேர் குணமடைந்துள்ள நிலையில் 1,711 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நாகையில் 211 பேருக்கும், புதுக்கோட்டையில் 236 பேருக்கும், அரியலூரில் 112 பேருக்கும், பெரம்பலூரில் 141 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.

    திருச்சியில் 10 பேர், தஞ்சையில் 7 பேர், நாகையில் 5 பேர், திருவாரூரில் 3 பேர், அரியலூரில் ஒருவர் என மொத்தம் 26 பேர் பலியாகி உள்ளனர். நேற்று ஒரே நாளில் மத்திய மண்டலத்தில் 2,006 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    Next Story
    ×