search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    திருவையாறு அருகே மோட்டார் சைக்கிள் மீது மினிலாரி மோதி பால் வியாபாரி பலி

    திருவையாறு அருகே மோட்டார் சைக்கிள் மீது மினிலாரி மோதி பால் வியாபாரி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவையாறு:

    திருவையாறு அடுத்த திருப்பழனம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் பிரகாசம்(55) பால் வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு வாசுகி என்ற மனைவியும், பிரியவர்‌ஷன்(13) என்ற மகனும், பிரியங்கா(16) என்ற மகளும் உள்ளனர்.

    நேற்று மதியம் வீட்டிலிருந்து மொபட்டில் புறப்பட்டு தஞ்சாவூருக்கு பால் வியாபாரத்திற்கு சென்றார். அம்மன்பேட்டை எம்.ஜி.ஆர். திரையரங்கம் அருகே செல்லும்போது தஞ்சையிலிருந்து திருவையாறு நோக்கி வந்த மினிலாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே பிரகாசம் இறந்துவிட்டார்.

    இது குறித்து தகவல் அறிந்த நடுக்காவேரி இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜோஸ்பின்சிசாரா, ஜம்புலிங்கம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பிரகாசம் உடலை கைப்பற்றி திருவையாறு அரசு மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்கு அனுப்பிவைத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    Next Story
    ×