என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நெல்லை, தென்காசி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.10 கோடிக்கு மது விற்பனை
Byமாலை மலர்10 May 2021 10:03 AM GMT (Updated: 10 May 2021 10:03 AM GMT)
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மொத்தம் 167 மதுக்கடைகள் உள்ளன. இந்த கடைகளில் நேற்று காலை முதல் மாலை 6 மணிக்கு மூடும் வரை தொடர்ந்து அமோகமாக மது விற்பனை நடந்தது.
நெல்லை:
தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கை முன்னிட்டு இன்று முதல் வருகிற 24-ந் தேதி வரை 15 நாட்கள் மதுக்கடைகள், பார்கள், நட்சத்திர ஓட்டல்களில் உள்ள மதுக்கூடங்கள் ஆகியவை அடைக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி நேற்று நெல்லை, தென்காசி மாவட்டங்களில் அனைத்து மதுக்கடைகளிலும் கடும் கூட்டம் அலைமோதியது.
ஒவ்வொருவரும் கடையை முற்றுகையிட்டு 5 மதுபாட்டில் முதல் 10 பாட்டில்கள் வரை வாங்கி சென்றனர். சிலர் ‘புல்’ மதுபாட்டில்கள் பலவற்றை வாங்கி சென்றனர்.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மொத்தம் 167 மதுக்கடைகள் உள்ளன. இந்த கடைகளில் நேற்று காலை முதல் மாலை 6 மணிக்கு மூடும் வரை தொடர்ந்து அமோகமாக மது விற்பனை நடந்தது.
நெல்லை, தென்காசி மாவட்டத்தில் மட்டும் நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.10 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.
இதற்கு முன்பு தீபாவளி, பொங்கல் திருநாளில் அதிகபட்சமாக ஒரே நாளில் ரூ.5 கோடி வரை மட்டுமே மது விற்பனை நடந்திருந்தது.
ஆனால் தற்போது அதை விட அதிகமாக ஒரே நாளில் ரூ.10 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.
ஒவ்வொரு ‘குடி’மகன்களும் 2 வாரத்திற்கு தேவையான மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி சென்றதே இந்த விற்பனை அதிகரிப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கை முன்னிட்டு இன்று முதல் வருகிற 24-ந் தேதி வரை 15 நாட்கள் மதுக்கடைகள், பார்கள், நட்சத்திர ஓட்டல்களில் உள்ள மதுக்கூடங்கள் ஆகியவை அடைக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி நேற்று நெல்லை, தென்காசி மாவட்டங்களில் அனைத்து மதுக்கடைகளிலும் கடும் கூட்டம் அலைமோதியது.
ஒவ்வொருவரும் கடையை முற்றுகையிட்டு 5 மதுபாட்டில் முதல் 10 பாட்டில்கள் வரை வாங்கி சென்றனர். சிலர் ‘புல்’ மதுபாட்டில்கள் பலவற்றை வாங்கி சென்றனர்.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மொத்தம் 167 மதுக்கடைகள் உள்ளன. இந்த கடைகளில் நேற்று காலை முதல் மாலை 6 மணிக்கு மூடும் வரை தொடர்ந்து அமோகமாக மது விற்பனை நடந்தது.
நெல்லை, தென்காசி மாவட்டத்தில் மட்டும் நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.10 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.
இதற்கு முன்பு தீபாவளி, பொங்கல் திருநாளில் அதிகபட்சமாக ஒரே நாளில் ரூ.5 கோடி வரை மட்டுமே மது விற்பனை நடந்திருந்தது.
ஆனால் தற்போது அதை விட அதிகமாக ஒரே நாளில் ரூ.10 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.
ஒவ்வொரு ‘குடி’மகன்களும் 2 வாரத்திற்கு தேவையான மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி சென்றதே இந்த விற்பனை அதிகரிப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X