என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இரணியலில் 66 மி.மீ. மழை- அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
Byமாலை மலர்10 May 2021 8:40 AM GMT (Updated: 10 May 2021 8:40 AM GMT)
திற்பரப்பு அருவி பகுதியில் கொட்டித்தீர்த்த மழையின் காரணமாக அருவியில் மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு மாவட்ட பகுதிகளிலும், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் பலத்த மழை கொட்டி தீர்த்து வருகிறது.
இரணியல் பகுதியில் நேற்று மாலை வானத்தில் கருமேங்கள் திரண்டு காணப்பட்டது. திடீரென மழை பெய்யத் தொடங்கியது. சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக இடி, மின்னலுடன் கன மழை கொட்டித்தீர்த்தது.
அங்கு அதிகபட்சமாக 66 மில்லி மீட்டர் மழை பதிவானது. நாகர்கோவிலிலும் நேற்று இரவு கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கன்னியாகுமரி, கொட்டாரம், மைலாடி, பூதப்பாண்டி, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, திருவட்டார், குற்றியாறு பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.
திற்பரப்பு அருவி பகுதியில் கொட்டித்தீர்த்த மழையின் காரணமாக அருவியில் மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை.
மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பெருஞ்சாணி- 28.8, சிற்றாறு1-5, சிற்றாறு2-23, மாம்பழத்துறையாறு- 54, குளச்சல்-12.6, குருந்தன்கோடு - 52, சுருளோடு- 2.4, கன்னிமார்- 12.4, ஆரல்வாய்மொழி- 2.6, மைலாடி- 11.4, அடையாமடை- 31, கோழிப்போர்விளை- 65, முள்ளங்கினாவிளை- 38, புத்தணை- 28, திற்பரப்பு- 51.4, நாகர்கோவில்- 45, இரணியல்- 66, ஆனைக்கிடங்கி- 43, பூதப்பாண்டி- 15.6.
அணைப்பகுதிகளிலும், மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
பேச்சிப்பாறை அணை நீர் மட்டம் இன்று காலை 41.60 அடியாக இருந்தது. அணைக்கு 130 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணையின் நீர் மட்டம் 54.35 அடியாக இருந்தது. அணைக்கு 116 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
சிற்றாறு1 அணையின் நீர் மட்டம் 7.15 அடியாக உள்ளது. அணைக்கு 24 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சிற்றாறு1 அணையின் நீர் மட்டம் 7.25 அடியாக இருந்தது. மாம்பழத்துறையாறு அணையின் நீர் மட்டம் 15.75 அடியாகவும், பொய்கை அணையின் நீர் மட்டம் 17 அடியாக உள்ளது.
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு மாவட்ட பகுதிகளிலும், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் பலத்த மழை கொட்டி தீர்த்து வருகிறது.
இரணியல் பகுதியில் நேற்று மாலை வானத்தில் கருமேங்கள் திரண்டு காணப்பட்டது. திடீரென மழை பெய்யத் தொடங்கியது. சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக இடி, மின்னலுடன் கன மழை கொட்டித்தீர்த்தது.
அங்கு அதிகபட்சமாக 66 மில்லி மீட்டர் மழை பதிவானது. நாகர்கோவிலிலும் நேற்று இரவு கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கன்னியாகுமரி, கொட்டாரம், மைலாடி, பூதப்பாண்டி, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, திருவட்டார், குற்றியாறு பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.
திற்பரப்பு அருவி பகுதியில் கொட்டித்தீர்த்த மழையின் காரணமாக அருவியில் மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை.
மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பெருஞ்சாணி- 28.8, சிற்றாறு1-5, சிற்றாறு2-23, மாம்பழத்துறையாறு- 54, குளச்சல்-12.6, குருந்தன்கோடு - 52, சுருளோடு- 2.4, கன்னிமார்- 12.4, ஆரல்வாய்மொழி- 2.6, மைலாடி- 11.4, அடையாமடை- 31, கோழிப்போர்விளை- 65, முள்ளங்கினாவிளை- 38, புத்தணை- 28, திற்பரப்பு- 51.4, நாகர்கோவில்- 45, இரணியல்- 66, ஆனைக்கிடங்கி- 43, பூதப்பாண்டி- 15.6.
அணைப்பகுதிகளிலும், மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
பேச்சிப்பாறை அணை நீர் மட்டம் இன்று காலை 41.60 அடியாக இருந்தது. அணைக்கு 130 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணையின் நீர் மட்டம் 54.35 அடியாக இருந்தது. அணைக்கு 116 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
சிற்றாறு1 அணையின் நீர் மட்டம் 7.15 அடியாக உள்ளது. அணைக்கு 24 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சிற்றாறு1 அணையின் நீர் மட்டம் 7.25 அடியாக இருந்தது. மாம்பழத்துறையாறு அணையின் நீர் மட்டம் 15.75 அடியாகவும், பொய்கை அணையின் நீர் மட்டம் 17 அடியாக உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X