search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முட்டை
    X
    முட்டை

    நாமக்கல்லில் முட்டை விலை 2 நாளில் 50 காசு உயர்வு

    ஊரடங்கு சமயத்தில் முட்டை விற்பனை அதிகமாக உள்ளதால் முட்டை விலையை உயர்த்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் நாள் ஒன்றுக்கு 4 கோடி கோழிகள் மூலம், 2.5 கோடி முட்டை உற்பத்தி செய்யப்படுகிறது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு நிர்ணயிக்கும் விலைக்கு, பண்ணையாளர்களிடம் இருந்து வியாபாரிகள் முட்டையை கொள்முதல் செய்கின்றனர்.

    தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக முட்டை நுகர்வு அதிகரித்து உள்ளது. இதனால் நாமக்கல் மண்டலத்தில் முட்டை உற்பத்தியும் அதிகமாக உள்ளது.

    இந்த நிலையில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவர் செல்வராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் முட்டை விலை நிர்ணயம் தொடர்பாக பண்ணையாளர்களுடன் ஆலோசிக்கப்பட்டது.

    ஊரடங்கு சமயத்தில் முட்டை விற்பனை அதிகமாக உள்ளதால் முட்டை விலையை உயர்த்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    இதை தொடர்ந்து முட்டை விலை 25 காசுகள் அதிகரித்து ரூ. 4.45 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. ஏற்கனவே நேற்று முன்தினம் முட்டை விலை 25 காசுகள் அதிகரித்தது. கடந்த 2 நாட்களில் முட்டை விலை 50 காசுகள் உயர்ந்துள்ளது.

    பிற மண்டலங்களில் முட்டை விலை வருமாறு:-

    ஆமதாபாத் ரூ.4.60, பெங்களூரு ரூ.4.40, சென்னை ரூ.4.60, சித்தூர் ரூ.4.53, மும்பை ரூ.4.90, விஜயவாடா ரூ.4.46.
    Next Story
    ×