என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாமக்கல்லில் முட்டை விலை 2 நாளில் 50 காசு உயர்வு
Byமாலை மலர்10 May 2021 3:31 AM GMT (Updated: 10 May 2021 4:58 AM GMT)
ஊரடங்கு சமயத்தில் முட்டை விற்பனை அதிகமாக உள்ளதால் முட்டை விலையை உயர்த்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
நாமக்கல்:
நாமக்கல் மண்டலத்தில் நாள் ஒன்றுக்கு 4 கோடி கோழிகள் மூலம், 2.5 கோடி முட்டை உற்பத்தி செய்யப்படுகிறது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு நிர்ணயிக்கும் விலைக்கு, பண்ணையாளர்களிடம் இருந்து வியாபாரிகள் முட்டையை கொள்முதல் செய்கின்றனர்.
தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக முட்டை நுகர்வு அதிகரித்து உள்ளது. இதனால் நாமக்கல் மண்டலத்தில் முட்டை உற்பத்தியும் அதிகமாக உள்ளது.
இந்த நிலையில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவர் செல்வராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் முட்டை விலை நிர்ணயம் தொடர்பாக பண்ணையாளர்களுடன் ஆலோசிக்கப்பட்டது.
ஊரடங்கு சமயத்தில் முட்டை விற்பனை அதிகமாக உள்ளதால் முட்டை விலையை உயர்த்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து முட்டை விலை 25 காசுகள் அதிகரித்து ரூ. 4.45 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. ஏற்கனவே நேற்று முன்தினம் முட்டை விலை 25 காசுகள் அதிகரித்தது. கடந்த 2 நாட்களில் முட்டை விலை 50 காசுகள் உயர்ந்துள்ளது.
பிற மண்டலங்களில் முட்டை விலை வருமாறு:-
ஆமதாபாத் ரூ.4.60, பெங்களூரு ரூ.4.40, சென்னை ரூ.4.60, சித்தூர் ரூ.4.53, மும்பை ரூ.4.90, விஜயவாடா ரூ.4.46.
நாமக்கல் மண்டலத்தில் நாள் ஒன்றுக்கு 4 கோடி கோழிகள் மூலம், 2.5 கோடி முட்டை உற்பத்தி செய்யப்படுகிறது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு நிர்ணயிக்கும் விலைக்கு, பண்ணையாளர்களிடம் இருந்து வியாபாரிகள் முட்டையை கொள்முதல் செய்கின்றனர்.
தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக முட்டை நுகர்வு அதிகரித்து உள்ளது. இதனால் நாமக்கல் மண்டலத்தில் முட்டை உற்பத்தியும் அதிகமாக உள்ளது.
இந்த நிலையில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவர் செல்வராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் முட்டை விலை நிர்ணயம் தொடர்பாக பண்ணையாளர்களுடன் ஆலோசிக்கப்பட்டது.
ஊரடங்கு சமயத்தில் முட்டை விற்பனை அதிகமாக உள்ளதால் முட்டை விலையை உயர்த்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து முட்டை விலை 25 காசுகள் அதிகரித்து ரூ. 4.45 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. ஏற்கனவே நேற்று முன்தினம் முட்டை விலை 25 காசுகள் அதிகரித்தது. கடந்த 2 நாட்களில் முட்டை விலை 50 காசுகள் உயர்ந்துள்ளது.
பிற மண்டலங்களில் முட்டை விலை வருமாறு:-
ஆமதாபாத் ரூ.4.60, பெங்களூரு ரூ.4.40, சென்னை ரூ.4.60, சித்தூர் ரூ.4.53, மும்பை ரூ.4.90, விஜயவாடா ரூ.4.46.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X